பத்திர பதிவு அலுவலகங்களில் மீண்டும் புரோக்கர்கள் ஆதிக்கம்

பத்திரபதிவு அலுவலகங்கள் வெவ்வேறு இடத்தில் உள்ளதால், கண்காணிப்பு குறைபாடு காரணமாக, புரோக்கர்களின் ஆதிக்கம் மீண்டும் சத்தமின்றிஅதிகரித்து வருகிறது. ராமநாதபுரத்தில் பத்திரபதிவு அலுவலகம்தான் ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் உள்ள அலுவலகமாக மாறி வருகிறது. இடம் விலையும் கிர்னு... ஏறுவதால், வாங்குவோரும் விற்போரும் அதிகரித்துவிட்டனர். வயல்வெளிகள் எல்லாம் பிளாட்டுகளாக மாறியதின் விளைவு ,இன்று பல இடங்களின் குடியிருப்புகளில் உள்ள மழைநீரை கடத்த முடியாத அவலத்தில் மக்கள் உள்ளனர்.

பத்திரபதிவு அலுவலகங்கள் கம்ப்யூட்டர்மயமாகி விட்ட நிலையில், தனிதனியாக வெவ்வேறு இடங்களில் அலுவலகங்களை இருப்பதும், ஒரு இடத்தில் அதிக பதிவுகளும், மற்றறொரு இடத்தில் பதிவே இல்லாமல் பணியாளர்கள் தூங்குவதுமாக உள்ளது. பதிவு அதிகம் உள்ள அலுவலகம் சந்து பொந்துகளில் அதிகாரிகள் எளிதில் ஆய்வுக்கு செல்ல முடியாத வகையில் அமைத்துள்ளனர். இதனால் புரோக்கர்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது. ஆய்வு அதிகாரி வந்தால் உடனடியாக தகவல் தெரியும் வகையில் உள்ளதால், இங்கு நடப்பதை கண்டுபிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசாரே திணறுகின்றனர். மேலும், மாவட்ட பத்திரபதிவு அலுவலகம், மற்றும் மற்ற மூன்று பதிவு அலுவலகங்களை ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வந்தால், ஒரளவு முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும். அதிகாரிகள் பார்வையில் இருந்தால், கீழ் மட்ட ஊழியர்கள், புரோக்கர்கள் தலையீடு இல்லாமல், நேர்மையான முறையில் பத்திரபதிவு நடக்க வாய்ப்பு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன், புரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்து , இடமதிப்பு குறைப்பதும், கூட்டுவதையும் தவிர்க்க முடியும்.

தற்போது வண்டிக்கார தெரு பத்திரபதிவு அலுவலகம் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதை இடித்து இங்கு புதிய கட்டடம் கட்டி, மாவட்ட பத்திரபதிவு அலுவலகம், மற்றும் மூன்று பத்திரபதிவு அலுவலகங்களை இங்கு கொண்டு வந்தாலே, நேரடி கண்காணிப்பில் பதிவுகளும் முறையாக நடக்க வாய்ப்பு உள்ளது.

தினமலர்